search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான பயணி"

    • விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டதில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை.
    • வெடிகுண்டு என நினைத்து தேங்காய் கொண்டு செல்ல சிஐஎஸ்எப் அனுமதிக்கவில்லை என பயணி பேசியிருக்கிறார்

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி செல்போனில் பேசும்போது வெடிகுண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது, அருகில் இருந்த பெண் பயணியின் காதில் விழ, அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். விமான ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.

    செல்போனில் பேசிய ஆண் பயணி, புகார் அளித்த பெண் பயணி இருவரும் கீழே இறக்கப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. ஆனால்  செல்போனில் பேசிய பயணி கைது செய்யப்பட்டு, விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற பயணிகளுடன் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வேலை நிமித்தமாக துபாய்க்கு புறப்பட்ட பயணி தனது தாயுடன் தொலைபேசியில் பேசியபோது, அவரின் அருகில் அமர்ந்திருந்த பெண் பயணிக்கு அந்த உரையாடல் கேட்டுள்ளது. அப்போது, "வெடிகுண்டு இருக்கலாம் என்று பயந்து சிஐஎஸ்எப் வீரர்கள் தனது பையில் தேங்காயை அனுமதிக்கவில்லை, ஆனால் பையில் வைத்திருந்த பான் மசாலாவை கொண்டு செல்ல அனுமதித்தனர்" என பேசியிருக்கிறார். இதில் வெடிகுண்டு என்ற வார்த்தையை கேட்டதும் பெண் பயணி புகார் அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண் ஊழியரை தகாத முறையில் அந்த பயணி தொட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    • ஊழியரிடம் தவறாக நடந்துகொண்ட பயணி, அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரும் இறக்கி விடப்பட்டனர்

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் அவர் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று ஐதராபாத்துக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறிய அந்த ஆண் பயணி, விமான பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பயணிக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் ஊழியர் உடனடியாக பாதுகாப்பு படை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து, பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்ட பயணி மற்றும் அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரையும் கீழே இறக்கி விசாரணை நடத்தினர்.

    பெண் ஊழியரை தகாத முறையில் அந்த பயணி தொட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் விமானத்தில் வரையறுக்கப்பட்ட பகுதியால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக சக பயணிகள். பின்னர் அந்த

    பயணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டார். இருப்பிலும் மேலும் பிரச்சனை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அவர் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

    ஆண் பயணி ஒருவர் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை அடுத்து, விமான ஊழியர்களும் பயணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ (ஏஎன்ஐ) வெளியாகி உள்ளது.

    • பாதிக்கப்பட்ட பெண் ஏர் இந்தியா தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பியபிறகுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
    • கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரியின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்தார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்து கொண்டிருந்தது. அப்போது பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த ஷங்கர் மிஸ்ரா என்பவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த நபர் மது போதையில் இருந்தார். இதுதொடர்பாக ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்களிடம் அந்த பெண் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு புதிய ஆடைகளை வழங்கிய பணிப்பெண்கள் அதே இருக்கையிலேயே அமருமாறு தெரிவித்தனர். விமான இருக்கைகள் முழுவதும் நிரம்பியிருந்ததால் அவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணும் வேறு வழியின்றி பயணித்துள்ளார்.

    பின்னர் விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், தவறு செய்த நபர் மீது எந்த நடவடிக்கையையும் ஏர் இந்தியா நிர்வாகம் எடுக்கவில்லை. இது அந்த பெண்ணுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு அந்த பெண் புகார் கடிதம் எழுதினார். இதன்பிறகுதான் இந்த முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வங்கி அதிகாரியான சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.

    இந்த நிலையில், ஷங்கர் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின் போது ஷங்கர் மிஸ்ரா தரப்பில் பெண் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்ற வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த வயதான பெண்மணிக்கு உடல்நல பாதிப்பு இருந்ததாகவும் இதன் காரணமாகவே அந்த பெண்ணே சிறுநீர் கழித்ததாகவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

    • திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கொரோனா அறிகுறிகளுடன் வந்த 2 பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
    • மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் சான்றிதழ்களை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில் இந்த விமானத்தில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

    கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு வெளிநாடுகளில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    இதனை கட்டுப்படுத்தும் வகையிலும், கொரோனா அறிகுறிகளுடன் வரும் பயணிகளை கண்காணிக்கவும் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தமக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் சான்றிதழ்களை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு பயணிக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதற்கான சான்றிதழ் இருந்தது. இதனை அறிந்த மருத்துவ குழுவினர் உடனடியாக அவரை திருச்சி பொது மருத்துவமனையில் உள்ள வார்டில் அனுமதிக்க ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்

    சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் நேற்று திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரும் தமக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான சான்றிதழுடன் வந்தார்.

    இதனை அறிந்த மருத்துவ குழுவினர் அவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனை அறிந்த இரண்டு விமானங்களிலும் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ×